கிரிவலப் பாதையில் ஆக்கிரப்புகள் அகற்றம் குறித்து ஆய்வு

பழனியில் கிரிவலப் பாதையில் ஆக்கிரப்புகள் அகற்றம் மற்றும் பக்தர்கள் வசதிக்கு மேற்கொண்டு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையான குழுவினர் ஆய்வு

Update: 2024-02-25 13:22 GMT

ஆக்கிரப்புகள் அகற்றம் குறித்து ஆய்வு

பழனியில் கிரிவலப் பாதையில் ஆக்கிரப்புகள் அகற்றம் மற்றும் பக்தர்கள் வசதிக்கு மேற்கொண்டு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதைத் தொடர்ந்து சில நாட்களாக கிரிவல பாதையில் ஆக்கிரப்புகள் அகற்றப்பட்டு மக்களுக்கு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. கிரிவலம் பாதையில் எந்த விதமான அவசர வாகனங்களை தவிர எந்த வாகனமும் வரக்கூடாது என்ற உத்தரவு நடைமுறைக்கு கொண்டு வருவதற்காக பல்வேறு ஆய்வுகளை இன்று ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News