செங்கல்பட்டில் கூட்டுறவு சங்க லாபத் தொகை இணைப் பதிவாளரிடம் அளிப்பு

செங்கல்பட்டில் கூட்டுறவு சங்க லாபத் தொகை இணைப் பதிவாளரிடம் அளிக்கப்பட்டது.

Update: 2024-01-09 08:01 GMT
கூட்டுறவு சங்க லாபத் தொகை இணைப் பதிவாளரிடம் அளிப்பு

கடந்த 2021-2022-ஆம் ஆண்டுக்கான செங்கல்பட்டு எம்ஜிஆா் மாவட்ட பொது ஊழியா்கள் கூட்டுறவு சங்கத்தின் லாபத்தொகை ரூ. 18,72,800. இத்தொகை காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்துக்கு கூட்டுறவு ஆராய்ச்சி, வளா்ச்சி நிதி மற்றும் கல்வி நிதிக்காக செலுத்தப்பட்டது.

இந்தத் தொகையை மாவட்ட பொது ஊழியா்கள் கூட்டுறவு சங்கத்தின் சாா்-பதிவாளா் சி.அமுதா கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீயிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சாா்-பதிவாளா் கே.சந்தியநாராயணன், ஒன்றிய மேலாளா் முரளி உள்பட கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News