ஹோட்டல் ஊழியர் திடீர் உயிரிழப்பு

பெரம்பலூரில் ஹோட்டல் ஊழியர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-24 12:05 GMT
பலி

பெரம்பலூர் தீரன் நகரை சேர்ந்தவர் செந்தில் குமார் -20 இவர் பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டிலுள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் செந் தில்குமார் ஓட்டலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார்.

இதனை கண்டு அதிர்ச் சியடைந்த சக ஊழியர்கள் செந்தில்குமாரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் செந்தில்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து செந்தில்குமாரின் உடல் மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News