நடுவலூர் ஏரிக்கரையில் திடீர் தீ

கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சியில் ஏரிக்கரையில் திடீர் தீ.

Update: 2024-04-10 15:41 GMT

தீ விபத்து 

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே நடுவலூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக சுமார் 100 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரி உள்ளது. நேற்று ஏரிக்கரையில் அம்மன் கோயில் அருகில் உள்ள புல், பூண்டுகள் திடீரென தீப்பிடித்தது. அவ்வழியாகச் சென்றவர்கள் கெங்கவல்லி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் (பொ) செல்லப்பாண்டியன் தலைமையில் தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து சென்று அப்ப குதியில் எரிந்து கொண்டிருந்த தீயை ஒருமணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சியடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Tags:    

Similar News