விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் அவதி; விவசாயிகள் புலம்பல்
விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
Update: 2023-11-30 16:17 GMT
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் நெல் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. நிலங்களில் அதிக அளவில் களை வளர்ந்துள்ளதால் அதனை எடுப்பதற்கு விவசாய தொழிலாளர்கள் கிடைக்காமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொழிலாளர்களுக்கு 5 மணி நேர வேலைக்கு ரூபாய் 250 லிருந்து 300 வரை கூலி, ஒருவேளை சாப்பாடு கொடுத்தாலும் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை என விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.