எடப்பாடியில் கரும்பு தோட்டம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

Update: 2023-11-13 11:25 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி பகுதியில் உள்ள வேப்பமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவரது இரண்டு ஏக்கர் ஆலை கரும்பு தோட்டம் எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றி எரிந்ததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எடப்பாடி தீயணைப்பு துறை தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு பணி துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அனைத்தனர்.

மேலும் கரும்பு தோட்டம் திடீரென தீப்பற்றி தெரிந்தது குறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென ஆலை கரும்பு தோட்டம் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

Tags:    

Similar News