பேராவூரணியில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

பேராவூரணியில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கபட்டது.

Update: 2024-03-29 15:39 GMT

விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டம்,  பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு திடலில் மாணவர்களுக்கு  விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது . 

சோழநாடு கிராமப்புற விளையாட்டு அறக்கட்டளையின் கீழ் செயல்படும், கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாணவர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு திடலில் இலவச விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை மதன்பட்டவூர் சிவனாம்புஞ்சை கிராமத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சத்தியசுந்தரம் ஒருங்கிணைப்பில் செயல்படும் தாய்மண் ஆட்டச் சாலை அமைப்பு சார்பில் வழங்கும் விழா, சமூக ஆர்வலர்  சிவசதீஷ்குமார்  தலைமையில் நடைபெற்றது . 

விழாவில், ரூ.2 லட்சம் மதிப்பிலான தடகள பயிற்சிக்கு தேவையான அனைத்து விளையாட்டு உபகரணங்களும் சுமார் 80 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் விளையாட்டு பயிற்சியாளர்கள் நீலகண்டன், சுப்பிரமணியன், அருண்குமார், கௌரி மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

Tags:    

Similar News