சேத்துப்பட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கல்
சேத்துப்பட்டு நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு நீர் ,மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-30 15:54 GMT
நீர்மோர் வழங்கல்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு இலவசமாக நீர், மோர் வழங்கும் நிகழ்ச்சி நகர தலைவர் அக்பர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் மற்றும் ஜமாத்தார்கள் தொடங்கி வைத்தனர். இதில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.