துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைப்பு!

மக்களவைத் தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிமம் பெறப்பட்ட 516 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Update: 2024-03-19 12:21 GMT

காவல் துறை

புதுக்கோட்டை: மக்களவைத் தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிமம் பெறப்பட்ட 516 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலையொட்டி உரிமம் பெற்று, துப்பாக்கி வைத்துள்ளோர் அவரவர் எல்லைக்குள்பட்ட காவல் நிலையத்தில் அவற்றை ஒப்படைக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் நிலையா உத்தரவு. இதன்படி, கைத்துப்பாக்கி, நீண்டஉரிமம் வைத்துள்ளோருக்கு போலீஸார் முறைப்படி அறிவிப்புகளைக் கொடுத்துள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 518 பேர் துப்பாக்கி உரிமம் வைத்துள்ளனர். திங்கள்கிழமை மாலை நிலவரப்படி இவர்களில் 516 பேர் தங்களின் துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்து, உரிய ரசீது பெற்றுச் சென்றனர். மீதமுள்ள 2 பேரும் வெளியூரில் இருப்பதால் ஓரிரு நாளில் நேரில் வந்து துப்பாக்கிகளை ஒப்படைப்பதாக உறுதியளித்துள்ளனர் என போலீஸார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News