சூழ்ந்த வெள்ளம் - கால்நடை மருத்துவமனை இடமாற்றம்

தூத்துக்குடியில் பெருமழை வெள்ளம் காரணமாக கால்நடை மருத்துவமனையில் மழை நீர் சூழ்ந்திருப்பதால் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

Update: 2023-12-24 07:10 GMT
கால்நடை மருத்துவமனை 
தூத்துக்குடியில் பெருமழை வெள்ளம் காரணமாக கால்நடை மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.  கடந்த 18ஆம் தேதி ஏற்பட்ட பெருமழை காரணமாக தூத்துக்குடி கால்நடை பண்முக மருத்துவமனை வளாகத்திற்குள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அன்றாட பணிகளை தடையின்றி மேற்கொள்ளும் விதமாக மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கீழூர் கால்நடை மருந்தக வளாகத்தில் 23.12.2023 முதல் தற்காலிகமாக கால்நடை மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.  பொதுமக்கள் தங்களது கால்நடைகள், செல்லப்பிராணிகளை தினமும் காலை 8 மணி முதல் இரவு 8வரை சிகிச்சைக்கு அழைத்து வந்து பயன்பெறுமாறு மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News