செண்பகக்கால்வாயில் ஆய்வு

Update: 2023-12-18 11:32 GMT

செண்பகக்கால்வாயில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் துரை ஆகியோர் பார்வையிட்டனர். 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்காசி மாவட்டம் சுரண்டையில் இன்று செண்பகக்கால்வாயில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தினால் சுரண்டை தேவர் திருமண மண்டபப்பகுதியில் பாவூர்சத்திரம் வழியாக தென்காசி செல்லும் முக்கிய சாலையில் வெள்ள நீரால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இப்பகுதியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார், உடன் மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜன் சசோங்கம் ஜடக் சீரு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News