வேளாண்மை வணிக துணை இயக்குனர் ஆய்வு 

எடப்பாடி பகுதிக்கு உட்பட்ட விளைநிலங்களில் மாவட்ட வேளாண்மை வணிக துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2024-02-16 03:30 GMT

எடப்பாடி பகுதிக்கு உட்பட்ட விளைநிலங்களில் மாவட்ட வேளாண்மை வணிக துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம் அஸ்தம்பட்டி .மேட்டூர் எடப்பாடி எளம்பிள்ளை உட்பட 11 உழவர்சந்தைகள் செயல்பட்டு வருகிறது.இச்சந்தைகளில் காய்கறிகளின் வரத்தை அதிகரிக்க சேலம்மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் வேளாண்வணிகம் முணைவர். V.பாலசுப்பிரமணி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

அதனை தொடர்ந்து மாட்டம் முழுவதும் விவசாயிகளை சந்தித்து வயல் ஆய்வு செய்து காய்கறிகளின் வரத்தை அதிகரிக்கநடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து எடப்பாடி உழவர்சந்தைக்கு உட்பட்ட பகுதிகளான தேவூர், மூலக்கடை,பொன்னம்பாளையம் ,ஆவணிப்பேரூர் மேல்முகம்.வெள்ளார்நாய்க்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் விவசாயிகளின் வயலுக்கு சென்று வயல் ஆய்வு மேற்கொண்டார்.மேலும் உழவர் சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வந்து அதிகளவில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்.வயர் ஆய்வில் வேளாண்மை அலுவலர்கள் சுஜாதா,பிரேமலதா மற்றும் உதவி வேளான்மை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News