எவலமலையில் தமாகா வேட்பாளர் விஜயகுமார் பிரச்சாரம்

எவலமலையில் தமாகா வேட்பாளர் விஜயகுமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-31 15:57 GMT

வாக்கு சேகரித்த வேட்பாளர்

ஈரோடு பாராளுமன்ற தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளர் விஜயகுமார் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சிகளுடன் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எலவமலை ஊராட்சி பகுதியில் உள்ள செல்லாண்டியம்மன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்து தேர்தல் பரப்புரையை துவங்கினார்.

தேர்தல் பரப்புரையை துவங்கிய வேட்பாளர் எலவமலை ஊராட்சி, காளிங்கராயம்பாளையம், லட்சுமி நகர் பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார். நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி, பா.ஜ.க ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வி. சி. வேதானந்தம் மற்றும் பா.ஜ.க தேசிய, மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகளுடன் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News