அதிமுக ஆலோசனை வழங்கினால் தமிழக அரசு ஏற்பதில்லை - செங்கோட்டையன்

கள்ளசாராயத்தை ஒழிப்பது குறித்து அதிமுக சொல்லும் ஆலோசனைகளை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Update: 2024-06-25 05:41 GMT

ஆர்ப்பாட்டம் 

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத.தினர்.இந்த ஆர்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் , விழுப்புரம் கள்ளச்சாராயத்திலேயே அரசு நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும் ஆனால் அப்போது உறுதியான நடவடிக்கை எடுக்காததால் கள்ளக்குறிச்சி விவகாரம் நடைபெற்றது என்றார். கள்ளச்சாராயத்தை தடுக்க தாலுக்கா அளவில் குழுக்களை ஏற்படுத்தி , அவர்கள் தரும் அறிக்கை மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.கள்ளச்சாராய இன்னும் தொடர வேண்டும் என திமுக நினைக்கிறது. அதை தடுக்க அதிமுக ஆலோசனை சொல்கிறது , ஆனால் அதை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது என்றார்.
Tags:    

Similar News