பாஜவுக்கு ஆதரவு அளிக்கும் தமிழ்நாடு மறவர் பேரவை

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜ.,வுக்கு முழு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு மறவர் பேரவை மாநிலத்தலைவர் கூறினார்.

Update: 2024-04-02 07:35 GMT

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜ.,வுக்கு முழு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு மறவர் பேரவை மாநிலத்தலைவர் கூறினார்.  

தமிழ்நாடு மறவர் பேரவை வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக மதுரை ஐல் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மாநிலத் தலைவர் பேட்டி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள செய்தியாளர் சங்கத்தில் தமிழ்நாடு மறவர் பேரவை சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

  இதில் மாநிலத் தலைவர் ஜெயச்சந்திரத் தேவர் கூறுகையில் DNC / DNT என்ற இரட்டை சான்றிதழை விலக்கி DNTஎன்ற ஒற்றை சான்றிதழை கொடுக்குமாறும் பல முறை திமுக மற்றும் அதிமுக அரசிடம் தெரிவித்தும் துரோகம் செய்துவிட்டனர் தற்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் DNT மக்களுக்கு ஒன்பது சதவீத OBC இட ஒதுக்கீட்டை தர தயாராக இருக்கின்ற பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது எனவும் மேலும் மறவர் நலவாரியம் அமைத்து தரப்படும் என்று மதுரை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் உறுதியளித்ததையே அடுத்து தென்காசி தொகுதியை தவிர்த்து மற்ற ஏனைய அனைத்து தொகுதிகளிலும் பாஜக வுக்கு ஆதரவாக செயல்படுது என தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

நிகழ்சியின் போது மதுரை பாஜக நாடாளுமன்ற வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் அங்கு வந்தார் அவருக்கு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்

Tags:    

Similar News