தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கரூர் மாவட்ட கிளை நிர்வாகிகள் தேர்தல்

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கரூர் மாவட்ட கிளை நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.

Update: 2024-02-17 09:42 GMT
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கரூர் மாவட்ட கிளை நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. கரூர் அடுத்த வெங்கமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், கரூர் மாவட்ட கிளைக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளராக கோயம்புத்தூர் மாவட்ட செயலாளர் தங்கபாசு & துணை தேர்தல் ஆணையாளராக திருப்பூர் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜா செயல்பட்டனர். ஜனநாயக முறைப்படி நடைபெற்ற இந்த தேர்தலில், கரூர் மாவட்ட தலைவராக எம். ஏ.ராஜா, மாவட்ட செயலாளராக ஜெயராஜ், மாவட்ட பொருளாளராக தமிழரசி, மாவட்ட துணை தலைவர்களாக செல்லமுத்து, சத்தியமூர்த்தி, அண்ணாமலை ஆகியோரும், மாவட்ட துணை செயலாளராக அருள் குழந்தை தேவதாஸ், சுப்பிரமணியன், யசோதா ஆகியோரும் போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பொன். ஜெயராம், நாமக்கல் மாவட்ட தலைவர் கலைச்செல்வன், நாமக்கல் மாவட்ட செயலாளர் மாதேஷ், மாநில செயலாளர் சகிலா ஆகியோர் கலந்து கொண்டு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர்.
Tags:    

Similar News