தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-11 10:52 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

சேலம் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் மத வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி சேலம் கோட்டை பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் காஜா தலைமை தாங்கினார்.

மாவட்ட தலைவர் முகம்மது அம்ஜத் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் இம்ரான் கலந்து கொண்டு போராட்டத்தின் நோக்கம் குறித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் அனைத்து மதங்களின் வழிபாட்டு தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும், 1991-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை அப்படியே தொடர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News