தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக கடலை, தேங்காய், எள் எண்ணெய்களை விற்க கோரி கீழ்பென்னாத்தூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-14 14:06 GMT

சாலை மறியல் 

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் பல்வேறு விவசாய சங்கத்தினர் ஒருங்கிணைந்து,சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நியாய விலை கடைகளில். இந்தோனிசியா, மலேசியா பாமாயிலுக்கு பதிலாக தேங்காய், நிலக்கடலை மற்றும் எள் எண்ணெய்களை நியாய விலை கடைகளில் விற்க கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
Tags:    

Similar News