திருப்பூர் மாவட்டத்தில் மே தினத்தன்று டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-04-29 15:10 GMT

மாவட்ட ஆட்சியர் 

திருப்பூர் மாவட்ட  கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது திருப்பூர் மாவட்டத்தில் வரும் நாளை  (புதன்கிழமை) மே தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கிவரும்  டாஸ்மாக் கடைகள் (எப்.எல்.1) அவற்றுடன் செயல்படும் மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு உரிமம் பெற மதுபானக் கூடங்கள் (எப்.எல்.2- எப்.எல்.3) ஆகியவை நாளை (மே 1) முழுவதும் மூடப்பட்டு,

மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்யப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News