கோட்டக்குப்பத்தில் தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழு கூட்டம்.

Update: 2023-11-20 06:55 GMT
தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழு கூட்டம்.
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக்குழு கூட்டம் கோட்டக்குப்பம் பரக்கத் நகரில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில துணை தலைவர் பாரூக், துணை பொதுச்செயலாளர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் தலைமை தாங்கினர். இஸ்ரேல் போர் விதிமுறைகளை மீறி போர்க்குற்றம் புரிவதை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கக்கூடாது, உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவர கடுமையான அழுத்தம் கொடுக்கவேண்டும், நீண்டகாலமாக சிறையில் உள்ள முஸ்லிம்களை விடுதலை செய்யவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி விழுப்புரம் மாவட்ட தலைவராக சல்மான் பார்சி, செய லாளராக முகமது இப்ராஹீம், பொருளாளராக அப்துல் லத்தீப், துணைத்தலைவராக முகமது இலியாஸ், துணை செயலாளர்களாக முகமது அன்சாரி, முகமது பாரிஸ், அப்துல்ஹை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு கிளைகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News