திருவள்ளூர் அருகே இளம்பெண் தற்கொலை
திருவள்ளூர் அருகே கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Update: 2024-03-06 08:50 GMT
கனகம்மாசத்திரம் அடுத்த பனப்பாக்கம் காலனியை சேர்ந்தவர் தமிழ்செல்வன், இவரது மனைவி நவரத்தினம், 23, தம்பதிக்கு நான்கு மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் நவரத்தினம் மின் விசிறியில் புடவையால் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.