காட்பாடி: கஞ்சா விற்ற வாலிபர் கைது!

காட்பாடி பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Update: 2024-06-08 09:32 GMT

கைது

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டூவீலரில் சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை பிடித்து இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் கிடக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அவர் விற்பனைக்காக அரை கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. மேலும் விசாரணையில் அவர் காட்பாடியை சேர்ந்த சந்தோஷ் என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலரையும் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலில் சந்தோஷை சிறையில் அடைத்தார்.
Tags:    

Similar News