தந்தையை கத்தியால் குத்திய வாலிபர் கைது

தூத்துக்குடியில் மதுகுடிப்பதை கண்டித்ததால் தந்தையை கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-05-26 04:54 GMT
தந்தையை கத்தியால் குத்திய வாலிபர் கைது

கைது

  • whatsapp icon
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள சிறுபாடு கிராமம், சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் மைக்கேல் ராஜ் (51). இவரது மகன் பிரான்சிஸ் (26) அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனை மைக்கேல் ராஜ் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த பிரான்சிஸ் தந்தையை கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் புதுக்கோட்டை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஞானராஜா வழக்குப் பதிந்து, பிரான்சிஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News