வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது

மேல்மருவத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பகுதிகளில் உள்ள வீடுகளில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-06-02 04:14 GMT

கைது செய்யப்பட்ட வினோத்

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் சித்தாமூர்,, கீழ்கடுங்காலூர், உத்தரமேரூர்,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டிருக்கும் வீடுகளில் புகுந்து கடந்த இரண்டு வருடங்களாக திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இது குறித்து காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  கடந்த இரண்டு வருடங்களாக மதுராந்தகம், சித்தாமூர், கீழ்க்கொடுங்காலூர், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் இருக்கும் வீடுகளில் கொள்ளை அடித்த காஞ்சிபுரம் மாவட்டம்,உத்திரமேரூர் தாலுக்கா,காவனூர் புதுச்சேரி கிராமத்தைச் சேர்ந்த வினோத் (வயது 28) என்பவர் கைது செய்யப்பட்டார்.மேலும், இவரிடமிருந்து 40 சவரன் நகை ரொக்க பணம் ரூபாய் 1.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வினோத் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்  அவரை நீதிமன்றத்தில் ஆஜர்டுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News