பைக் வாங்கி கொடுக்காததால்  வாலிபர் தற்கொலை !

இரணியல் அருகே பைக் வாங்கி கொடுக்காததால்  வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2024-04-13 12:16 GMT

வழக்கு பதிவு

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல்  அருகே உள்ள பூசாஸ்தான் விளை பகுதியை சேர்ந்தவர் சண்முக பெருமாள் மகன் அபிஷேக் (22) இவருக்கு திருமணம் ஆகவில்லை. சண்முக பெருமாள் சமீபத்தில் இறந்து விட்டார்.

தற்போது கண்டன் விளையில் தாயாருடன் வசித்து வந்தார். அபிஷேக்கிற்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.      

இந்த நிலையில் தனக்கு பைக் வாங்கி தருமாறு குடும்பத்தினரிடம் அடம் பிடித்துள்ளார். தற்போது பணம் இல்லாததால் பணம் கிடைத்ததும் பைக் எடுத்து தருவதாக தாயார் கூறினார். இந்த நிலையில் நேற்று இரவில் மீண்டும் தாயாரிடம் கேட்டுள்ளார்.  

தாயார் அதற்கு சம்மதிக்காததால், கோபித்துக் கொண்டு படுக்கை அறைக்கு சென்றுள்ளார்.  சிறிது நேரத்துக்கு பின், சாப்பிட அழைப்பதற்காக அபிஷேக்கின் அறையில் சென்று கதவை தட்டிய போது எந்த பதிலும் இல்லை.

இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அபிஷேக் மின்விசிறியில் தாயின் சேலையால் தூக்கு போட்டு இந்த நிலையில் காணப்பட்டார்.     

 இது குறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News