காதல் தோல்வியால் வாலிபர் த

தூத்துக்குடியில் காதல் தோல்வியால் வாலிபர் காதலர் தினத்தன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-02-15 12:51 GMT

கோப்பு படம் 

தூத்துக்குடியில் காதல் தோல்வியால் வாலிபர் காதலர் தினத்தன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு, பாத்திமா நகரைச் சேர்ந்தவர் ஆனந்த சைரஸ் மகன் பிரான்சிஸ் சரோன் (18), 2ஆம் கேட் அருகில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் இவரது காதலை ஏற்கவில்லையாம். இதனால் மனவேதனையடைந்த அவர் நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News