திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-02-25 07:46 GMT
தற்கொலை 

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த ஆயிரமங்கலம் கிராமம் ஆதிதிராவிடர் காலனி பொன்னியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் ,(லேட்) விஸ்வநாதன் என்பவரின் மகன் திலகரசன் (வயது 32) என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது தந்தை இறந்து விட்டதனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார்.

எனவே திருமணமாகாத விரக்தியில் பக்கத்து தெருவில் வசித்து வரும் தனது பெரியப்பா மகன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திமிரி போலீசார் பிரேதத்தை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தற்கொலை குறித்து திமிரி காவல் ஆய்வாளர் தனலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News