ரயில் மோதி வாலிபர் பலி

வண்டலூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயில் மோதி உயிரிழந்தார்.

Update: 2023-12-29 01:33 GMT
உயிரிழப்பு 
கூடுவாஞ்சேரி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன், 44. நேற்று முன்தினம் இரவு, வண்டலுார் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில், படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News