வேன் ஓட்டுநர் மரணத்திற்கு நீதி கேட்டு கிராம மக்கள் சாலைமறியல்

மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.

Update: 2024-03-13 18:42 GMT

வேன் ஓட்டுநர் உடலை வாங்க மறுத்து போராட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு புதூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன், கடந்த 8ம் தேதி மர்மமாக முறையில் உயிரிழந்தார். ஆனால், போலீசார் தாக்கியதால் முருகன் மரணம் அடைந்ததாக கூறி கடந்த 6 நாள்களாக உடலை வாங்க  மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் முருகனின் இறப்பிற்கு ஒரு கோடி ரூபாய் அரசு வழங்க வேண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், இந்த வழக்கில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 32 கிராம மக்கள் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட்ட்னர். 

ராஜபாளையம்- திருவேங்கடம் செல்லும் சாலையில் மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

Similar News