திண்டுக்கல்: தை மாத பிரதோஷம் விழா

நத்தம்-கோவில்பட்டி உள்ள கைலாசநாதர் திருக்கோயிலில் தை மாத பிரதோஷத்தை புதன்கிழமை நடைபெற்றது.

Update: 2024-02-08 07:57 GMT

பிரதோஷ வழிபாடு 

திண்டுக்கல் மாவட்டம், நத்தம்-கோவில்பட்டி உள்ள கைலாசநாதர் சமேத செண்பகவல்லி திருக்கோயிலில் தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு அங்குள்ள நந்தி சிலைக்கு பால், இளநீர்,சந்தனம், ஜவ்வாது,மஞ்சள் தேன் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மூலவர் கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

Tags:    

Similar News