தக்கலை : வீட்டில் பதுக்கிய 42 கிலோ ஓலை பட்டாசு பறிமுதல்

Update: 2023-11-05 02:47 GMT

பறிமுதல் செய்யப்பட ஓலை வெடி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குமரி மாவட்டத்தில் தக்கலை அருகே பரைக்கோடு பகுதியில் ஒரு வீட்டில் பட்டாசு தயாரித்து பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை தக்கலை இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். இதில் பரைக்கோடு பாட்டவிளாகம் பகுதியை சேர்ந்த மகேஷ் (49) என்பவரின் வீட்டில் ஓலை பட்டாசுகள் தயாரித்து பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த பட்டாசு மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 42 கிலோ பட்டாசுகள் இருந்தன. அதை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக மகேஷ் மற்றும் அவரது மனைவி ராதா (44) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News