தாணுலிங்க நாடார் பிறந்த தின பைக் பேரணி

தாணுலிங்க நாடார் நினைவு பைக் பேரணி நாகர்கோவிலில் நடைபெற்றது

Update: 2024-02-17 10:58 GMT
 பைக் பேரணி 
இந்து முன்னணியின் நிறுவனரும்,  முதல் மாநில தலைவருமான தாணுலிங்க நாடார் 109வது பிறந்த தின விழா இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து பைக் பேரணி புறப்பட்டது. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். நெல்லை கோட்ட பொறுப்பாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். வெள்ளி மலை விவேகானந்தர் ஆசிரமத் தலைவர் சைதன்யானந்தா ஜி மகராஜ் ஆசியுரை வழங்கினார். முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்  சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநகரச் செயலாளர் அண்ணாதுரை பைக் பேரணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் டாக்டர் மாறச்சன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை செயலாளர் காளியப்பன்,  இந்து ஆலய பாதுகாப்பு மாநில தலைவர் தெய்வ பிரகாஷ் உட்பட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன், நிர்வாகிகள் மீனாதேவ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பைக் பேரணி நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தாணுலிங்க நாடாரின் நினைவிடம் அமைந்துள்ள பொற்றையடியில் நிறைவு பெற்றது. அங்கு தொடர்ந்து அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் கருத்தரங்கம் நடைபெற்றது.
Tags:    

Similar News