குவிந்துள்ள குப்பைக்கழிவுகளை அகற்றணும்...!

பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே குவிந்துள்ள குப்பைக் கழிவுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

Update: 2024-01-09 10:42 GMT

 பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே குவிந்துள்ள குப்பைக் கழிவுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.பொன்னமராவதி-திருப்பத்தூர் சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளது. இந்த பணிமனையின் முன்பு, திருப்பத்தூர் சாலையின் ஓரமாக வசிப்போரால் அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்தக் குப்பைகளால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலங்களில் கழிவு நீர் பெருக்கெடுத்து பணிமனையினுள் செல்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, பணிமனை முன்பு கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
Tags:    

Similar News