உடலில் காயங்களுடன் அழுகிய ஆண் பிணம் கண்டுபிடிப்பு !
திண்டுக்கல், சிறுமலை அடிவாரத்தில் உள்ள கல்லூத்தாம்பட்டி அருகே யானை விழுந்த பள்ளம் ஓடையில் உடலில் காயங்களுடன் அழுகிய ஆண் பிரேதம் கண்டுபிடிக்கப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-30 05:41 GMT
ஆண் பிரேதம்
திண்டுக்கல், சிறுமலை அடிவாரத்தில் உள்ள கல்லூத்தாம்பட்டி அருகே யானை விழுந்த பள்ளம் ஓடையில் உடலில் காயங்களுடன் அழுகிய ஆண் பிரேதம் கிடப்பதாக நேற்று திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.