திண்டுக்கல்லில் தலையில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நடத்துனர்

திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தலையில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்த ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2024-05-07 14:41 GMT

தற்கொலைக்கு முயன்ற நடத்துனர் 

பணிசுமை காரணமாக அரசு போக்குவரத்து நடத்துனர் செல்வம் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்தார். திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து துறை இரண்டாம் பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வருபவர் செல்வம்.

இவர் இன்று அரசு போக்குவரத்து பணிமனைக்கு நேரில் வந்து உடல்நிலை சரியில்லை என்று கூறி விடுமுறை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு நிர்வாகம் விடுமுறை தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நடத்துனர் செல்வம் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News