மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே ஏரியில் மீன்பிடிக்க சென்ற நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-01-29 06:03 GMT

சடலமாக மீட்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே உள்ள தம்மாண்டரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பழனி(38), இவருக்கு திருமணமாகி லட்சுமி என்கிற மனைவியும் ஒரு ஆண்,ஒரு பெண் பிள்ளைகள் உள்ளநிலையில் இன்று மதியம் தம்மாண்டரப்பள்ளியில் உள்ள ஏரியில் மீன்பிடிக்க சென்று, நீண்டநேரமாக கறைக்கு திரும்பாத நிலையில், சந்தேகமடைந்த உறவினர்கள், கிராம மக்கள் ஏரியில் பழனியை தேடி உள்ளனர்.

தகவலறிந்து வந்த தேன்கனிக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் ஒருமணிநேர தேடுதலுக்கு பிறகு பழனியை சடலமாக மீட்டுள்ளனர். பழனியின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கெலமங்கலம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீன்பிடிக்க சென்ற நபர் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News