விதைப்பந்து தூவுதல் திட்டத்தினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

விதைப்பந்து தூவுதல் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.

Update: 2023-10-31 14:43 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்டத்தின் பசுமையை மேம்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் பசுமையாக்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த விதைப்பந்து தூவும் திட்டத்திற்காக சுமார் 3 லட்சம் விதைப்பந்துகள் பெறப்பட்டு, பெறப்பட்ட விதைப்பந்துகளை வனப்பகுதிகள், ஊராட்சி கண்மாய் கரையோரங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மூலம் விதைப்பந்தங்களை தூவ திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் விருதுநகர் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில், விதைப்பந்து தூவுதல் திட்டத்தினை துணை இயக்குநர் திருவில்லிப்புத்தூர் மேகலை புலிகள் காப்பகம் திலீப்குமார், முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.

Tags:    

Similar News