திமுக சார்பில் நாளை மொழிப்போர்தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்
தாராபுரம் வெள்ளகோவில் பகுதியில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் அழைப்பு.
By : King 24x7 Website
Update: 2024-01-24 06:55 GMT
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மாநகராட்சி 4&வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. கழகத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழகங்கள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக மாணவர் அணி நடத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. அதன்படி உடுமலை தாராபுரம் சாலையில் தாஜ் திடலில் திரைப்பட நடிகர் போஸ் வெங்கட், தலைமை கழக பேச்சாளர் முரசொலி மூர்த்தி ஆகியோர் பேசுகிறார்கள். இதுபோல் தாராபுரம் அண்ணாசிலை அருகில் கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் விஜய், தலைமை கழக பேச்சாளர் செங்கல்பட்டு சீனிவாசன், வெள்ளகோவில் வி.பி.எம்.எஸ். நகரில் கொள்கை பரப்பு இணைச்செயலாளர் சந்திரகுமார், நான் (இல.பத்மநாபன்), தலைமை கழக பேச்சாளர் குமரி பிரபாகரன் ஆகியோர் பேசுகிறார்கள். எனவே இந்த பொதுக்கூட்டத்தில் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் கழக மாணவர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் மற்றும் ஏணைய துணை அமைப்புகளின் நிர்வாகிகள் முன்னாள், இந்நாள் பிரநிதிகள், மாணவர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.