பதற்றமான வாக்குச்சாவடிகளை தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு!
ஆரணியில் பதற்றமான வாக்குச் சாவடிகளை தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியதர்ஷினி நேரில் சென்று ஆய்வு செய்தார்.;
Update: 2024-04-03 09:00 GMT
ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மக்களவை தொகுதிக்குட்பட்ட பதற்றமான வாக்குச் சாவடிகளை தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியதர்ஷினி நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பால சுப்பிரமணியன், வட்டாட்சியர் மஞ்சுளா, மண்டல துணை வட்டாட்சியர் தேவி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.