குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுகொடுத்த தந்தை நீரில் மூழ்கி பலி

களியக்காவிளை அருகே குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்த தந்தை நீரில் மூழ்கி பலியானார்.

Update: 2023-10-21 14:13 GMT

fileimage

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பனச்சக்குழி மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் விஜில் (வயது 40). இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். விஜில் களியக்காவிளை பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். சம்பவ தினம் விஜில் மது அருந்தி விட்டு தன்னுடைய 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டு அருகில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார்.

மேலும் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுத்தருவதாக கூறி 2 குழந்தைகளுடன் குளத்தில் இறங்கியுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்திற்கு பிறகு குழந்தைகள் கரைக்கு வந்துள்ளனர். ஆனால் விஜில் கரைக்கு வரவில்லை.  குழந்தைகள் அப்பாவை காணாததால் சத்தமாக அழுதுள்ளனர். குழந்தைகளின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் குளத்தில் இருந்து விஜிலை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.  இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News