பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவர் கைது

கள்ளகுறிச்சி மாவட்டம் , திருக்கோவிலூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-26 06:37 GMT

கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் பெருமாள் நாயக்கர் வீதியை சேர்ந்தவர் ரமேஷ், 54; இவர், அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுபற்றி அந்த மாணவி தனது தாயிடம் கூறியும் கண்டு கொள்ளவில்லை. மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, குழந்தைகள் நல காப்பகத்தில் தகவல் தெரிவித்ததின்பேரில், ரமேஷ் மீது திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து, ரமேஷை கைது செய்தனர். மாணவியின் தாய் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News