பேருந்து வசதியை துவக்கி வைத்த அமைச்சர்

தலைவாசல் அருகே போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேருந்து வசதியை துவக்கி வைத்தார்.

Update: 2024-03-15 01:44 GMT

பேருந்து வசதியை துவக்கி வைத்த அமைச்சர்

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி தலைவாசல் ஒன்றியத்துக்குட்பட்ட மணி விழுந்தான் ஊராட்சியில் பேருந்து வசதி இல்லாததால் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரிடம் தேர்தல் புறக்கணிப்போம் என்று புகார் அளித்தனர். இதனை அடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் நேற்று ஆத்தூரில் இருந்து முட்டல் பகுதிக்கு செல்வதற்கு பேருந்து வசதியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.
Tags:    

Similar News