கலை விழாவை துவக்கி வைத்த அமைச்சர்

மயிலாடுதுறை அருகே மாவட்ட கலை விழாவை மெய்யநாநன் துவக்கி வைத்தார்

Update: 2023-10-26 08:33 GMT

கலைவிழா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் மாவட்ட கலை திருவிழா போட்டியை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார் மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் கலைமகள் கல்லூரியில் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டி இன்று தொடங்கியது. நடனம், பாட்டு, இசை, கவின் கலை, நுண்கலை, ஓவியம், கட்டுரை, பேச்சுப்போட்டி, நாடகம், கருவி இசை, மொழித்திறன் போட்டி, நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய வட்டார அளவில் நடத்தப்பட்ட கலை திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்ற 2051 மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடக்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, எம்.பி ராமலிங்கம், எம்எல்ஏக்கள்  உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News