ஈரோடு மாவட்டத்தில் திட்டப்பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு பல்வேறு திட்டப்பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்தார்.

Update: 2023-12-26 10:33 GMT

ஆய்வு செய்யும் அமைச்சர்

ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகளை தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.

ஈரோடு ஊராட்சி ஒன்றியம், மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.227.54 இலட்சம் மதிப்பீட்டில் அய்யம்பாளையம்,ராமக்கவுண்டன் வலக, எல்லப்பாளையம் ஓடை பகுதி மற்றும் ரூ.239.26 இலட்சம் மதிப்பீட்டில் அருந்ததியர் எல்லப்பாளையம் சுடுகாடு எல்லப்பாளையம் ஓடையில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்து, பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அமைச்சர் சு.முத்துசாமி அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News