பாப்பிரெட்டிபட்டியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் துவக்கம்

தர்மபுரி மாவட்டம்,பாப்பிரெட்டி பகுதியில் பல்வேறு நலதிட்ட உதவிகளை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார்.

Update: 2024-03-06 07:58 GMT

நலதிட்ட உதவிகள் துவக்கி வைப்பு

தர்மபுரி மாவட்டம், திமுக மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் பொம்மிடி வருவாய் ஆய்வாளர் புதிய குடியிருப்பு திறப்பு,சித்தேரி VAO அலுவலகம் திறப்பு,வேப்பிலைப்பட்டி செங்கா நகரில் நியாயவிலை கடை திறப்பு,கலசப்பாடியில் பகுதிநேர நியாவிலை கடை முழுநேரமாக மாற்றி திறந்துவைத்தல், அரூர் வனசரக அலுவலகம் கட்டிடம் கடத்தூரில் பாலிடெக்னிக் கல்லூரியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று மாலை மக்கள் வளர்ச்சி மற்றும் நல திட்டங்களை துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நிகழ்வில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் சாந்தி தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன்,தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி முன்னாள் எம்எல்ஏ மற்றும் அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், திமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News