காணாமல் போன சிறுவன்; பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்

மானாமதுரையில் பஸ் ஸ்டாண்டில் அழுதுகொண்டிருந்த 6 வயது சிறுவனை மீட்ட போலீசார் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

Update: 2023-12-28 05:18 GMT

  மானாமதுரையில் பஸ் ஸ்டாண்டில் அழுதுகொண்டிருந்த 6 வயது சிறுவனை மீட்ட போலீசார் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.  

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் சுமார் 6 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனது வீட்டிற்கு செல்ல முடியாமல் அழுது கொண்டிருப்பதை பார்த்த பயணிகள் சிலர் மானாமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரித்து அச்சிறுவனை ரயில்வே காலனியில் உள்ள அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசாரை டிஎஸ்பி கண்ணன் பாராட்டினார்
Tags:    

Similar News