பிறந்த குழந்தையை ரோட்டோரத்தில் வீசி சென்ற தாய்

பெரம்பலூர்- துறையூர் ரோட்டிலுள்ள அம்மாபாளையத்தில் பிறந்து சில மணி நேரங்களேயான தொப்புள்கொடி அறுக்கப்படாத குழந்தையை இறந்த நிலையில் போலீசார் மீட்டனர்.

Update: 2024-01-04 05:40 GMT
பெரம்பலூர்- துறையூர் சாலையில் உள்ள அம்மாபாளையம் கிராமம், இரட்டை பாலம் அருகில் பிறந்து சில மணி நேரங்களேயான தொப்புள்கொடி அறுக்கப்படாத இறந்த நிலையில் பெண் குழந்தை சடலம் ஜனவரி - 4ம் தேதி இன்று காலை கிடந்துள்ளது, இதனை கண்ட அப்பகுயில் சென்ற நபர்கள், பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார், இறந்து கிடந்த பெண் சிசு உடலை மீட்டு பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பிறந்த குழந்தையை தூக்கி வீசி சென்ற தாய் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News