காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த ஊராட்சி மன்ற தலைவர் கைது

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-05-17 17:07 GMT

பஞ்சாயத்து தலைவர் கைது

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றுபவர் பழனி.மற்றும் அவருடன் காவலர் சரவணன் ஆகிய இருவரும் கடந்த 15 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு கூடலூர் கிராமத்தில் ரோந்து பணிக்காக சென்றனர். அப்பொழுது, கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு என்கின்ற அன்பழகன் காவலர்களை ஊருக்குள் உள்ளே வரவிடாமல் வழிமறித்து அசிங்கமாக பேசி அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.

இதுகுறித்து காவலர் பழனி மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவலர் பழனி கொடுத்த புகாரின் பேரில் மேல்மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை விசாரணை செய்து கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு என்ற அன்பழகன் (வயது 45) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News