குடிநீர் கிணற்றிற்கு மேல் மூடி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

Update: 2024-01-03 11:37 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே செம்முண்டி கிராமம் உள்ளது.இக்கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இக்கிராமத்திற்கு குடிநீர் தேவைக்காக கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு அந்த குடிநீர் கிணற்றிலிருந்து மோட்டார் மூலம் மேல் நீர் தேக்க தொட்டி மூலம் கிராமம் முழுவதும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.. ஆனால் தற்பொழுது இந்த குடிநீர் கிணற்றின் மேல் மூடி இல்லாமல் காணப்படுகிறது..இதனால் இந்த குடிநீர் கிணற்றில் அசுத்தம் ஏற்படுகிறது.எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த குடிநீர் கிணற்றிற்கு மேல்மூடி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News