மது போதையில் கார் ஓட்டியவர் மீதி வழக்கு பதிவு!

ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்த கார் பாறை மீது மோதி விபத்து மது போதையில் இருந்த டிரைவர் மீது வழக்கு பதிவு.

Update: 2024-02-07 10:23 GMT

மது போதையில் கார் ஓட்டியவர் மீதி வழக்கு பதிவு

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்த கார் பாறை மீது மோதி விபத்து மது போதையில் இருந்த டிரைவர் மீது வழக்கு பதிவு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் ஐந்தாவது வளைவில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் இவர் ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றுள்ளார். சதீஷ்குமார் மது போதையில் காரை ஓட்டி சென்று வளைவில் உள்ள பாறை மீது மோதி விபத்தை ஏற்படுத்தி போக்குவரத்து பாதிப்பை ஏற்ப்படுத்தி உள்ளார் மது போதையில் வாகன ஓட்டிகள் உடன் ரகளையிள் ஈடுபட்டுள்ளார்.  இது குறித்து சுற்றுலா வாசிகள் ஏலகிரி மலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.  தகவலின் பேரில் போலீஸார் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்து மது போதையில் இருந்த சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags:    

Similar News